எசல பெரஹர காரணமாக கொழும்பு – ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து மட்டு

எசல பெரஹர காரணமாக கொழும்பு – ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து மட்டு

(FASTNEWS | COLOMBO) – நவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக இன்றும்(17) நாளையும் (18) கொழும்பு – ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் இன்று(17) இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணியளவிலும் நாளை(18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.