சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேர் கைது

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேர் கைது

(FASTNEWS | COLOMBO) – மெக்ஸிகோ நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் திகதி,கட்டாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கி நாட்டுக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர்.

அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.