மாலபே – கொழும்பு இலகு ரயில் கட்டமைப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

மாலபே – கொழும்பு இலகு ரயில் கட்டமைப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – மாலபே – கொழும்பு இலகு ரயில் கட்டமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

ரயில் பயணிப்பதற்காக தூண் நிர்மாணிக்கும் இடங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதன் பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் மூலம் மாலபேயில் இருந்து கோட்டை வரையில் 16 கிலோ மீற்றர் தூரம் புதிய இலகு ரயில் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் மேல் நவீன சொகுசு வசதிகளை கொண்ட இலகு ரயில் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.