பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – தந்தை, மகன் உயிரிழப்பு

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – தந்தை, மகன் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – நேற்றிரவு (17) பல்லகெடுவயிலிருந்து பிடபொல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எல்ல – கபரகல பிரதேசத்தில் சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அவரின் 3 பிள்ளைகள் சிகிச்சைக்காக தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 35 வயதான தந்தையும் 8 வயதான மகனும் உயிரிந்துள்ளனர்.

ஹெலபுபுல பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

12 மற்றும் 8 வயதான சிறுவர்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.