9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்

9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்

(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவருகிறது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தமது 9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

5 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த சதத்தை பெற்றுள்ளார்.

4 ஆவது இன்னிங்சில் சதம் பெற்ற இலங்கை டெஸ்ட் அணித் தலைவர்கள் வரிசையில் இவர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.