கோட்டாபயவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை

கோட்டாபயவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை

ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கோட்டாபய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் இன்று(8) அந்த 9 பேரும் வரவில்லை எனவும் கோட்டாபய உள்ளிட்ட சிலரே வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.