லசந்த படுகொலை தொடர்பில் ஆராய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழு

லசந்த படுகொலை தொடர்பில் ஆராய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழு

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படுகொலைச்சம்பவம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரியுமாயின் 071-8591753 மற்றும் 017-8591770 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து 2009ஆம் ஆண்டு ஜனவர் 8ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.