திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹேகித்தை மார்க்க நீர்க்குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (31) காலை 10.00 மணி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி பிற்பகல் 04 மணி வரை சில இடங்களில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை நீர்கொழும்பு வீதி, எவரிவத்தை வீதி, தெலகபாத, மீகஹவத்தை, ஹேகித்தை, பள்ளியவத்தை, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுாவ, மருதானை வீதி, எலகந்த ஆகிய பிரதேசங்கள் மற்றும் ஹெந்தளை வீதியின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.