பரிந்துரை அறிக்கை திங்களன்று

பரிந்துரை அறிக்கை திங்களன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதென, அக்குழுவின் செயலாளர், சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை நேற்று (31) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையிலேயே, 5ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.