மேற்கிந்திய தீவுகள் – இலங்கை : டெஸ்ட் ஆட்டம் மழையினால் பாதிப்பு

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை : டெஸ்ட் ஆட்டம் மழையினால் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஆன்டிகுவா) – மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 354 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தலைவர் பிராத்வெயிட் 126 ஓட்டங்களும் ரகீம் கார்ன்வால் 73 ஓட்டங்களும் எடுத்தனர். லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும், பெர்ணான்டோ, லசீத் தனஞ்செய டி சில்வா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்து இருந்தது. திரிமன்னே 55 ஓட்டங்களை எடுத்தார். சந்திமால் 34 ஓட்டங்களையும், தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. 218 ஓட்டங்கள் பின்தங்கி கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

நேற்றைய ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. 7 முறை மழையால் ஆட்டம் தடைபட்டது.

சந்திமால் 44 ஓட்டங்களும் தனஞ்செய டி சில்வா 39 ஓட்டங்களும் நிசாங்கா 49 ஓட்டங்களும் எடுத்தனர். அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.