வெடிப்பொருட்களுடன் நால்வர் கைது

வெடிப்பொருட்களுடன் நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுமதிப்பத்திரம் இன்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

நாவுல, எலஹெர வீதியின் பகமுண பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் வைத்து குறித்த வெடிப்பொருட்கள் மீட்கக்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 வோடர் ஜெல் குச்சிகள், 20 கிராம் வெடி மருந்து, 14 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.