பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 இற்கும் அதிக கொரோனா மரணங்கள்

பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 இற்கும் அதிக கொரோனா மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேஸில்) – பிரேஸிலில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேஸிலில் கடந்த  24 மணி நேரத்தில் 77,391 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,00,580 ஆக உயர்ந்துள்ளது.

பிரேஸிலில் இதுவரை சுமார் 337,000 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.