சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இம்முறையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே புத்தாண்டைக் கொண்டாட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட வேண்டும். ஆனாலும் புத்தாண்டு கொள்வனவுக்காக கடைகளுக்கு செல்லும் போது கொரோனா வைரஸ் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிறக்கும் புத்தாண்டை ஆரோக்கியமான புத்தாண்டாக அமைத்துக்கொள்ள, சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் உப தலைவர் வைத்தியர் புத்திக விட்டகச்சி தெரிவித்துள்ளார்.