ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்

ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை கண்டறிவதற்காக சந்தைகளில் பெறப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆய்வுக்காக பேராதனை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக குறித்த அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், சந்தைகளில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அண்மையில் அறிவித்தார்.

இதேவேளை, அஃப்ளாடொக்சின் அடங்கியுள்ளமை என உறுதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் ஏற்றப்பட்ட ‘பாபரா’ என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டு சென்றுள்ளது.

105 மெற்றிக் டன் அளவிலான தேங்காய் எண்ணெய் தொகையே இவ்வாறு மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.