ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக, தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்புமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஏனைய ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்புமென, ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.