கொரோனாவுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் பலி

கொரோனாவுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு (74) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை காலமானார்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிக்கு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமான பாண்டு, பின்னர், சிவாஜி, கமல், ரஜினி அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பல திரையுலக பிரபலங்களின் இல்லம், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்தவர் பாண்டு, அதிமுக கட்சி கொடியை வடிவமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.