சஜின் மற்றும் அவரது பாரியாருக்கு அமைச்சர் தர பாதுகாப்பு

சஜின் மற்றும் அவரது பாரியாருக்கு அமைச்சர் தர பாதுகாப்பு

மஹிந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் 6 பாதுகாப்பு காவலர்கள் பாதுகாப்பு வழங்கியதுடன், அவரது மனைவிக்கு 2 கான்ஸ்டபிள்களினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சஜினுக்கு எதிராக இதுவரையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த அரசாங்கத்தின் போது, இடம்பெற்ற மோசடி குறித்து மேற்கொள்கின்ற விசாரணைகளுக்காக அரசாங்க சாட்சியளராக மாறுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். தனது பாதுகாப்பினை கருதி அவர் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளுடன் இணைந்து செய்யப்பட்ட நபர்களின் கோபங்களுக்கு சஜின் வாஸ் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதனால் குற்றப் புலனாய்வு பிரிவினால் சஜின் மற்றும் அவரது மனைவிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு அமைய, அமைச்சர் தர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சஜின் வாஸ் மற்றும் அவரது மனைவி அமைச்சர் தர பாதுகாப்பு படையினருடன் பயணிக்கின்ற நிலையில், கடந்த 12ஆம் திகதி இப்பாதுகாவலர்களுடனே இவர்கள் கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.