குவாதர் பொருளாதார ஆற்றலை மேலும் வலுப்படுத்தல்

குவாதர் பொருளாதார ஆற்றலை மேலும் வலுப்படுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிகவும் கவர்ச்சி மிக்க கடற்கரையைக் கொண்ட ஒரு துறைமுக நகரான குவாதர், சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலமாக உருவாக முடியும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இயற்கையான ஆழம் மிக்க துறைமுகமாக கருதப்பட்டதோடு இவ்வாறான ஒரு துறைமுகத்திற்கான அவசியம் பல ஆண்டுகளாக உணரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் ஆரம்பத்துடன் சீனாவின் பெல்ட் அண்ட் சாலை முன்முயற்சியின் (BRI) முதற்திட்டமாக திட்டமாக, மேற்கு சீனாவை மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைப்பதிலும், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்திடுவதற்கும் முக்கிய மூலோபாய தலமாக குவாதர் கருத்தப்பட்டது.

“சீன பாகிஸ்தான் பொருளாதார பாதையின் மாணிக்கம்” என்று அழைக்கப்படும் குவாதர் தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு சிறந்த இடமாகவும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஏராளமான வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியமான இடமாகவும் காணப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின் படி, முழுமையாக குவாதர் இலவச பொருளாதார மையங்கள் அமைக்கப்பட்டதன் பின்னர், ஆண்டுதோறும் $ 13 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சாத்தியப்படும் என கூறப்படுகிறது.

குவாதர் தெற்கு பொருளாதார மையம் 66 ஏக்கர் நிலபரப்பை உள்ளடக்கியது. ஜூலை 20, 2021 அன்று குவாதருக்கு விஜயம் செய்த பிரதமரினால் குவாதர் வடக்கு பொருளாதார மையம் திறந்து வைக்கப்பட்டதோடு இது தெற்கு பொருளாதார மையத்தை விடவும் கிட்டத்தட்ட 35 மடங்கு பெரிதாக, 2200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திற்கு பெரும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க சீன முதலீட்டாளர்கள், பல்வேறு தொழிலாளர்கள் குவாதர் பொருளாதார மையங்களில் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக முதலீடு செய்வதற்கு வீடியோ இணைப்பின் மூலம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இவ்விஜயத்தின் போது, சீன பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ், வேளாண் தொழிற்பூங்கா, குவாதர் ஏற்றுமதி மையம், குவாதர் விலங்கு தடுப்பூசி மையம், மசகு எண்ணெய் தொழிற்சாலை, உர தொழிற்சாலை ஆகியவை பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மேலும்,இப்பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரச்சினைகளான சுத்தமான குடிநீர் மற்றும் மலிவான மின்சாரம் ஆகியவை வழங்குவதற்காக உப்பு நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் நிலையம் அமைப்பதற்கும் பாகிஸ்தான் அரசுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றுக்கு அப்பால் , பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக நாட்டின் முன்னணி தொழில்துறை மற்றும் வணிக மையமான கராச்சியுடனான குவாதர் துறைமுகத்தின் இணைப்பை மேம்படுத்துவதில் கிழக்கு விரைவுச்சாலை கட்டுமானம் காணப்படுகிறது.

சுருக்கமாக சொல்வதானால் , பிரதமரின் சமீபத்திய குவாதர் விஜயமானது, குவாதரை நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புபடுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும்,தொழில்மயமாக்கலை மேம்படுத்துவதன் மூலமும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமன், எகிப்து மற்றும் கென்யா போன்ற அனைத்து முக்கிய அண்டை நாடுகளிலும் இருந்து நேரடி வெளிநாட்டு முதலீட்டை பெருமளவு கொண்டுவருவும் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தவும் உதவும்.

வணிகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த செயல்முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதாகும். பலூசிஸ்தானின் மாகாண அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்குவதன் மூலம் எதிர்நோக்கும் தடைகளை நீக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் (BRI) குவாதரை வணிக நடவடிக்கைகளின் மைய இடமாக மாற்றுருவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் அப்பால், முழு பலுசிஸ்தான் மாகாணத்தையும், குறிப்பாக அதன் தெற்குப் பகுதியையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

அரசாங்கம் கடந்த ஆண்டு தெற்கு பலுசிஸ்தானின் சமூக-பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களுக்காக 654 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியமை அதற்கான ஒரு தெளிவான சான்றாகும்.2021-22 நிதியாண்டின் மத்திய PSDP இலாகாவில் 100 பில்லியன் ரூபா மதிப்புள்ள பலுசிஸ்தானிற்கான 53 வளர்ச்சித் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.போக்குவரத்து, உள்கட்டமைப்பு, சுத்தமான குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வழங்கல், தகவல் தொழில்நுட்பம், சக்தி வள மேம்பாடு, தொழில் மற்றும் வர்த்தகம், கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.மேலும், எல்பிஜி ஏரி வாயு வழங்குவதோடு மட்டுமல்லால், இப்பகுதிக்கான பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் மின்சார விநியோகத்தை 12% லிருந்து 57% ஆக அதிகரிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

டிஜிட்டல் பலுசிஸ்தான் திட்டத்தின் கீழ், மாகாணத்தின் முக்கிய போக்குவரத்து மையங்களை சுற்றி அதிவேக இணைய இணைப்பை வழங்கப்படும்.மேலும், பலுசிஸ்தானின் 35,000 இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இக்னைட் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தினால், இப்பகுதியின் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட திறமையான இளைஞர்கள் இணையத்தள வேலை வாய்ப்புகளைப் பெற வசதியாக அமையும்.

குவாதர் நகரம், குவாதர் துறைமுகம், குவாதர் சர்வதேச விமான நிலையம் மற்றும் குவாதர் இலவச பொருளாதார மையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக இப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் குறிப்பிட்டார்.

குவாதரின் இந்த வளர்ச்சியைக்கண்டு , உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தான் எதிர்ப்பு சக்திகள் அதன் வளர்ச்சிப் பாதையை தடுக்க முயற்சித்து வருகின்றன.எனினும், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு எதிர்ப்பு சக்திகளின் நடவடிக்கைகளை கவனமாக உற்று நோக்கி வருகிறது. மேலும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் குவாதரின் வளர்ச்சியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மூலம்: அப்துல் ரஷீத் ஷாகிர்