பசிலின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினத்தை வழங்கியது

பசிலின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினத்தை வழங்கியது

நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என, தெரிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது.

இன்று குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இதற்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இதற்கான மறுப்பை வெளியிட உயர்நீதிமன்றம் மனுதாரர் தரப்புக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகள் மீண்டும் அடுத்த வருடம் ஜூன் 14ம் திகதி இடம்பெறும் என ஈவா வனசுத்தர தலைமையிலான நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.