ஜனவரி முதல் தனியார் பிரிவினருக்கான திணைக்களம்

ஜனவரி முதல் தனியார் பிரிவினருக்கான திணைக்களம்

தனியார் பிரிவின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து நிதியமைச்சின் உள்ளே தனியார் பிரிவினருக்காக தனியான திணைக்களமொன்று இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற சந்திப்பின்போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கூறியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.