ரணிலின் யோசனைக்கு சுமந்திரன் இணக்கம்!

ரணிலின் யோசனைக்கு சுமந்திரன் இணக்கம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, தமது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பீர்களா? எனவும் சுமந்திரனிடம் பிரதமர் வினவியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பிரேரணைகளுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் பதில் வழங்கியதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சட்ட சீர்திருத்தக் குழுவிற்கு தலைமை தாங்கும் பிரதமர் ரணிலின் யோசனைக்கு சுமந்திரன் இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.