கச்சத்தீவை மீட்பதே பாஜகவின் இலட்சியம்: மோடியிடம் வலியுறுத்துவோம் – அண்ணாமலை

கச்சத்தீவை மீட்பதே பாஜகவின் இலட்சியம்: மோடியிடம் வலியுறுத்துவோம் – அண்ணாமலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கச்சத்தீவை மீட்க, பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் இதுவே, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் லட்சியம் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று(14) விசைப்படகில் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடல் பயணம் சென்றனர்.

அதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் பகுதி உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017- 2018 இல் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள், படகுகளை பிரதமர் மோடி மீட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 60 படகுகளை மீட்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

1974 இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமது தவறான அணுகு முறையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்.

தற்போது இலங்கைக்கு பயன்படாத நிலையில் கச்சத் தீவு உள்ளது.

எனவே, கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். அதை மீட்பதே தமிழக பா.ஜ.கவின் லட்சியம் என்றார்.