நல்லாட்சி அரசாங்கத்தை மூடி தனி அராசங்கம் வேண்டும் – நிமல் சிறிபால

நல்லாட்சி அரசாங்கத்தை மூடி தனி அராசங்கம் வேண்டும் – நிமல் சிறிபால

நல்லாட்சி அரசாங்கத்தின் அடையாளம் கூட மீதமில்லையென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளை – எல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்னும், தனி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான பணிகளை ஆதரவாளர்கள் தற்போது முதலே ஆரம்பிக்க வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நல்லாட்சி என்பது தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி இருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.