ஐம்பது சந்தைப்படுத்துனர்களில் இலங்கையர் ஒருவர்.

ஐம்பது சந்தைப்படுத்துனர்களில் இலங்கையர் ஒருவர்.

இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற உலக சந்தைப்படுத்துனர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் உலகின் மிகவும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய சந்தைப்படுத்துனர் ஐம்பது பேரில் இலங்கையர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

சுயாமஸ் குழும நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாரங்க விஜயரட்ன மிகச் சிறந்த சந்தைப்படுத்துனர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிலோன் நியூஸ் பேப்பர்ஸ், விஜய நியுஸ் பேப்பர்ஸ் போன்ற ஊடக நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவில் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பல்கலைக்கத்தின் எம்.பி.ஏ பட்டதாரியான சாரங்க, இளம் வயதிலேயே சந்தைப்படுத்தல் துறையில் பல சிகரங்களை எட்டியுள்ளார்.