3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்

3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்

ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை பிடித்த ஐ.எஸ்., இயக்கம், தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியது. அதுமுதல், 3,500 பேரை, அந்த இயக்கம் கொன்று குவித்துள்ளது.

இவர்களில், 103 பேர் பெண்கள்; 77 பேர் குழந்தைகள்.கடந்த மாதத்தில் மட்டும், 53 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்; இவர்களில், 35 பேர் பொதுமக்கள்.இவ்வாறு மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.