சென்னைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

சென்னைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும்  சென்னைக்கும் இடையிலான இருவழி விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்யும் கடும் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்தே சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், கனமழையின் காரணமாக விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வரவும், உள்ளே செல்லும் முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு வந்து சேரும் 20க்கும் மேற்பட்ட விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் சென்னை விமான நிலையம் தாற்காலிகமாக இன்று மூடப்படுவதாக விமானநிலைய ஆணையகம் தெரிவித்ததை அடுத்து விமானநிலையமானது மூடப்பட்டது.