
அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையில் தாமதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என்று ரயில்வே மேலும் குறிப்பிட்டுள்ளது.