ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

குசால் பெரேராவுக்குப் பதிலாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வா, நியூசிலாந்துக்குப் பயணமாகவுள்ளார்.