மாலபே மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிக்கு உத்தரவாதம்

மாலபே மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிக்கு உத்தரவாதம்

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதாக, சுகாதார அமைச்சால் உயர் நீதிமன்றத்தில் இன்று(15) உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சின் பிரதிநிதிகள் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக, எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடுவலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அவிசாவளை ஆதார வைத்தியசாலைகளில் குறித்த பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.