கரப்பான் பூச்சியை ருசித்து சாப்பிட்டேன் – கோஹ்லி

கரப்பான் பூச்சியை ருசித்து சாப்பிட்டேன் – கோஹ்லி

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கரப்பான் பூச்சியை சாப்பிட்டது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணித்தலைவராக கலக்கும் கோஹ்லி இலங்கை, தென் ஆப்பிரிக்கா என்று 2 அடுத்தடுத்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கோஹ்லி கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் ஜாலியாக பதிலளித்தார்.

அந்த சமயம் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், “நான் மலேசியாவுக்கு சென்றிருந்த போது ஊறுகாய் என்று கரப்பான் பூச்சியை ருசித்து சாப்பிட்டு விட்டேன்.

பின்னர் ஒருவர் கூறிய பிறகே அது கரப்பான் பூச்சி என்று எனக்கு தெரிந்தது” என்று கூறியுள்ளார்.