பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் இன்று

பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் இன்று

பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கொமிலா விக்டோரியன்ஸ் அணியும் பரிசால் புள்ஸ் அணியுமே இப்போட்டியில் மோதவுள்ளன.

இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு மஷ்ரபி மோர்தஸா தலைமை தாங்கும் நிலையில், இலங்கையின் நுவான் குலசேகர, பாகிஸ்தானின் அஹமட் ஷெஷாத், மேற்கிந்தியத் தீவுகளின் அன்ட்ரே றசல் ஆகியோர் முக்கிய வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.

பரிசல் புள்ஸ் அணிக்கு மகமதுல்லா தலைமை தாங்கும் நிலையில், பாகிஸ்தானின் மொஹமட் சமி, மேற்கிந்தியத் தீவுகளின் கெவோன் கூப்பர், இலங்கையின் சீக்குகே பிரசன்ன ஆகியோர், முக்கிய வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஏற்கெனவே தகுதிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி, ரங்பூர் றைடர்ஸ் அணியும் பரிசல் புள்ஸ் அணியும் திங்களிரவு மோதின.

இப்போட்டியில், ஷகிப் அல் ஹசன், திஸர பெரேரர், டெரன் சமி, லென்டில் சிமன்ஸ் ஆகியோர் அடங்கிய ரங்பூர் றைடர்ஸ் அணி 160 ஓட்டங்களைப் பெற, பரிசல் புள்ஸ் அணி, இறுதி ஓவரில் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்றது.