மறைத்து வைக்கப்பட்டிருந்த சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் சிக்கியது

மறைத்து வைக்கப்பட்டிருந்த சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் சிக்கியது

சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாராஹேன்பிட்டியில் களஞ்சியம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு கலையக வாகனம் ஒன்றை நேற்று கண்டுபிடித்துள்ளனர்.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டு தேடுதல் அனுமதியுடன் சந்தேகத்திற்கிடமான குறித்த களஞ்சியத்தை சோதனையிட்ட போது 40 அடி நீளமான இந்த வாகனத்தை கண்டுபிடித்ததாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஒளிப்பரப்பு கலையகம் வேறு வண்டி ஒன்றின் மூலம் இழுத்துச் செல்லக் கூடியது.

அதனை கைப்பற்றிய அதிகாரிகள் மீண்டும் களஞ்சியத்திற்கு வைத்து, களஞ்சியத்தை சீல் வைத்துள்ளனர்.

நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்க உள்ளனர்.