தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரலில்

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரலில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதமளவில் வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏப்ரலுக்கு முன்னர் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்யுமாறும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் பழைய தேர்தல் முறையின் கீழ், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா, இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.