மறைந்த காணி அமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் தலைமைகள்

மறைந்த காணி அமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் தலைமைகள்

மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் இறுதி சடங்கு இன்று கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், அவரின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு, பலர் உரிமை கோர ஆரம்பித்துள்ளனர்.

இதனடிப்படையில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன இது தொடர்பில் கூறும் போது,

தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்த பதவி வெற்றிடம் தமது கட்சியான ஜனநாயக தேசிய இயக்கத்துக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் இந்த பதவிக்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.