சிறுமி சமையலறையில் சடலமாய் மீட்பு
குருநாகல் மாவட்டம், மாவத்தகம பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது சிறுமியின் சடலத்தை, நேற்று வியாழக்கிழமை (28) மாலை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டிலுள்ள சமையலறையிலிருந்தே சடலத்தை மீட்டுள்ளதாகவும் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லையென மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவத்தகம பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.