கோஹ்லி வசை பாடியது தவறானதே – ஸ்மித் கருத்து

கோஹ்லி வசை பாடியது தவறானதே – ஸ்மித் கருத்து

இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லி நடந்து கொண்டு மிகவும் தவறானது, தேவையற்றது என அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கடந்த 26ம் திகதி நடந்தது.

அப்போது தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்துக் கொண்டே அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தார், உடனே கோஹ்லி வெளியே போ என்று கோபமாக பேசினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது, இந்நிலையில் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில், கோஹ்லி அங்கு மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார் இல்லையா? ஒருவர் அவுட் ஆகும் போது இப்படி நடந்து கொள்வது தேவையற்றது.

களத்தில் ஆடும் போது ஓரிரு வார்த்தைகளை கேலியாக நகைச்சுவையாக பேசலாம் அதில் தவறில்லை, ஆனால் அவுட் ஆகிச் செல்லும் போது இப்படி வசையில் ஈடுபடுதல் கூடாது.

வர்ணனையில் பேசிக்கொண்டிருந்தேன் என்பது உண்மைதான் ஆனால் அவுட் ஆனதற்கு எனது ஷாட் தேர்வே காரணம், அவரை 4 அல்லது சிக்ஸ் அடிப்பதற்குப் பதிலாக தூக்கி விட்டு 2 ஓட்டங்களை எடுக்க முயன்றேன், ஆட்டமிழந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.