ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஞானசாரருக்கு எங்கிருந்து நிதி கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கோத்தபாயவின் ஆதரவுடனேயே ஞானசார தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.