பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.கொழும்பு சட்ட பீட மாணவர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு சட்ட பீடத்தின் பீடாதிபதியின் பதவிக் காலம் கடந்த 22ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது.

எனினும் குறித்த பீடாதிபதி தொடர்ச்சியாக அந்தப் பதவியை வகித்து வருவதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய பீடாதிபதி ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.