பொய்ப் பிரச்சாரங்களாலேயே சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிறுத்தப்பட்டது – டாக்டர் அநுருத்த

பொய்ப் பிரச்சாரங்களாலேயே சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிறுத்தப்பட்டது – டாக்டர் அநுருத்த

ஒருசில ஊடகங்கள் இலங்கையில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் வியாபாரமாகிப் போனதாக வெளியிட்ட பொய்ப்பிரசாரங்களால் சுகாதார அமைச்சு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குத் தடைவிதித்திருக்கும் நிலை தோன்றியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அநுருத்த பாதெனிய குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் சிறுநீரகம் மற்றும் ஏனைய அவயங்களை மாற்றீடு செய்வதில் திறமையுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் இருப்பதாலேயே வெளிநாட்டவர்களும் இங்கு வருவதாகவும் அவயங்களை மாற்றீடு செய்வதற்கான 1987ஆம் ஆண்டின் சட்ட மூலத்துக்கு அமைவாகவே சிகிச்சைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒருசில ஊடகங்கள் இந்த சிகிச்சைகள் முற்றிலும் வியாபார நோக்கத்துக்காகவே செய்யப்படுவதாக பொய்ப்பிரச்சாரங்களைச் செய்வது வேதனைக்குரியது எனவும் தெரிவித்தார்.