வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு நீதிமன்ற அழைப்பாணை

வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு நீதிமன்ற அழைப்பாணை

ஆபத்தான ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷினி பெரேராவை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்னும், தற்போது மரணதண்டனை பெற்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவீந்து குணவர்தன உட்பட ஐந்து கைதிகளையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் நீதிவான் சிறை நிர்வாகத்துக்கு மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.