ஐ.தே.க மத்திய செயற்குழு முக்கிய தீர்மானங்களுக்காக இன்று கூடுகிறது

ஐ.தே.க மத்திய செயற்குழு முக்கிய தீர்மானங்களுக்காக இன்று கூடுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம்(08) கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி தொடர்பிலான யாப்பிற்கான ஆலோசனை கோரல், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இன்னும், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், கட்சியின் மத்திய செயற்குழு, கட்சித் தலைமையகமான சிறிகொத்த ஆகியனவற்றை மறுசீரமைப்பதற்கான யோசனைகளும் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு யாரை தெரிவு செய்வது என்பது குறித்தும் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.