தெற்கு அதிவேக வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வாகன விபத்து

தெற்கு அதிவேக வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வாகன விபத்து

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயில் அருகில் மூன்று சிற்றூர்தி, பேரூந்தொன்று மற்றும் ஜீப் வண்டியொன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று மாலை (15) இடம்பெற்றதாகவும் குறித்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதியின் குறுக்கே சென்ற நீர் உடும்பொன்றை காப்பற்றுவதற்காகவே காலி நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்று மேற்கொண்ட முயற்சியின் போது பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளமையும் தெரியவந்துள்ளது.