தொட்டலங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

தொட்டலங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

தொட்டலங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தங்களது வீடுகள் உடைக்கப்பட்டதனை எதிர்த்து தொட்டலங்க பிரதேச நஜீமா தோட்ட மக்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

பிரதேச மக்கள் நீர்கொழும்பு – கொழும்பு வீதியை மறித்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவுடன் போராட்டக்காரர்களுடன் நடத்திய சந்திப்பினைத் தொடர்ந்து, தற்காலிக அடிப்படையில் போராட்டத்தை கைவிடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.