தேங்காய் உடைத்தலும் அமைச்சர்களின் சுகவீனமும்

தேங்காய் உடைத்தலும் அமைச்சர்களின் சுகவீனமும்

வேண்டுதலுக்காக உடைக்கும் தேங்காய்களின் பலன் கட்டாயமாக  கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தேங்காய் உடைக்கும் செயல்திட்டத்தின் மூலம் என்ன நடக்கும் என, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று திரும்பும்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினரால் நாடு முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை, அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சுகயீனமடைந்து வருகின்றனர். இதுகுறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என கேட்டபோதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.