செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்ஹாஜ்.எஸ்சீ நாளை (01) இலங்கை வரவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இவர் நாளை இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு விடயங்களை கண்காணிப்பதே இவரது விஜயத்தின் பிரதான நோக்கமென கூறப்படுன்கிற, இதேவேளை வடக்கில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புகளில் பெரும்பாலானவை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பொதுசெயலாளர்.கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் அதேவேளை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.