சம்பிக்க கைது செய்யப்படுவார் – சுஜீவ சேனசிங்க

சம்பிக்க கைது செய்யப்படுவார் – சுஜீவ சேனசிங்க

ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்பு கொண்டிருந்தால் அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இந்த தகவலை நேற்று வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

சட்டத்தை பொறுத்தவரை இலங்கையில் அது அனைவருக்கும் பொதுவானது.

எனவே, அமைச்சர் என்பதால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

தாமோ அல்லது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவோ, சட்டத்துக்கு கீழ்படிந்தே நடக்கவேண்டும்.

இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் சம்பிக்க கைதுசெய்யப்படுவார் என்று சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.