ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத கனமழை

ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத கனமழை

துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையே காணாத வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அங்கு சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகின்றது. நேற்று மட்டும் 250 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அபுதாபி விமான நிலையம் 3 மணி நேரம் வரை மூடப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.