சம்பிக்கவின் ஜீப் வண்டியில் மோதுண்ட இளைஞனுக்கு நினைவு மீண்டது

சம்பிக்கவின் ஜீப் வண்டியில் மோதுண்ட இளைஞனுக்கு நினைவு மீண்டது

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞனுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கடந்த வாரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்டு சுயநினைவின்றி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சந்தீப் என்ற இளைஞனுக்கு தற்சமயம் சுயநினைவு திரும்பியுள்ளதாக உதய கம்மன்பில குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்தின் விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் உண்மைகளை கண்டறிய விபத்து இடம்பெற்ற இராஜகிரிய பிரதேசத்தின் சீ.சீ.டீ.வி கமெரா ஒளிப்பதிவுகளை பரிசீலிக்கவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையே குறித்த இளைஞனுக்கு நலம் வேண்டி சிவில் அமைப்பு ஒன்று இன்றைய தினம்(12) பூஜை வழிபாட்டொன்றை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.