நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்ட ஏழு பேருக்கு எதிராக பிணை

நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்ட ஏழு பேருக்கு எதிராக பிணை

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் இன்னும் 5 தேரர்கள் உட்பட ஏழுபேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இவர்கள், இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அந்த ஏழுபேருக்கும் பிணை வழங்கப்பட்டது.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்றே, இவர்கள் கட்டுக்கடங்காது நடந்துகொண்டனர்.