பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் – ஐஎஸ் அறிவிப்பு

பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் – ஐஎஸ் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சகல நாடுகள் மீதும் எதிர்வரும் காலங்களில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என அவ்வமைப்பு  பகிரங்கமாய் அறிவித்துள்ளது.

நேற்று(23) அரபு மற்றும் பிரான்சு ஆகிய மொழிகளில் பயங்கரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

தமக்கு எதிராக செயற்படும் நாடுகளில், எதிர்காலத்தில் இருண்ட நாள் ஒன்று உதயமாகும் எனவும் பயங்கரமான முடிவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கூறியுள்ளதாக குறித்த அறிவித்தலில் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.